மாகாணத்தினுள் அரச காணிகளை இனங்காணுதல், மற்றும் அவற்றினைப் பாதுகாக்கும் நடவடிக்கையினை மேற்கொண்டு இனங்காணப்பட்ட அரச காணிகளை மிகவும் பயனுள்ள விடயங்களுக்காக விடுவித்தல் , விடுவிக்கப்பட்ட காணிகளின் மீள்பார்வை நடவடிக்கை, மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளை உறுதிப்படுத்துவது மாகாண காணி ஆணையாளர் திணைக்களத்தின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றது.
பதின் மூன்றாவது அரசியலமைப்பின் திருத்தத்திற்கு இணங்க மாகாண சபைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள காணி அதிகாரங்களுக்கு இணங்க மாகாணத்தினுள் அரச காணிகளின் முகாமைத்துவம், மற்றும் நிர்வாகம் செய்வதற்காக மேல் மாகாணத்தின் காணி ஆணையாளர் திணைக்களம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
நோக்கம்
நிலையான அரச நில முகாமைத்துவம் – அபிவிருத்தி அடைந்த வளமான நாடு
செயற்பணி
அரசு நிலங்களை திறமையாகவும் வெளிப்படையாகவும் அகற்றுவதற்கும், அரச நிலங்களில் வசிக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும், நில மேம்பாடு மற்றும் பாதுகாப்பு மூலம் அரசு நில வரி வருவாயை உகந்த முறையில் அதிகரிப்பதன் மூலமும், நில முகாமைத்துவத்தில் சட்ட மற்றும் ஆலோசனை சேவைகளை வழங்குவதன் மூலமும், எதிர்கால வளர்ச்சியடைந்த நாட்டிற்கான நிலையான நில முகாமைத்துவத்திற்கு பங்களிப்புசெய்தல்.